ஆப்நகரம்

27 வழக்குகள்.... டிமிக்கி கொடுத்து கொண்டிருந்த ரவுடியை போட்டுத் தள்ளிய போலீஸ் !

கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீஸார் என்கவுன்ட்டர் செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Sep 2019, 10:44 pm
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவன் ரவுடி மணிகண்டன். இவன் மீது விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 8 கொலை வழக்குகள் உள்பட 27 கொலைகள் நிலுவையில் இருந்து வந்தன.
Samayam Tamil rme


ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக, புதுச்சேரி மாநிலத்துக்குட்பட்ட ஆரோவில் பகுதி போலீஸார், மணிகண்டனை தேடி கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவன், சென்னை கொரட்டூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே இன்று அங்கு விரைந்த தனிப்படை போலீஸார், மணிகண்டனை சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு மணிகண்டன் தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது.

அத்துடன், அவனை பிடிக்க முயன்றபோது, ஆரோவில் காவல் நிலைய எஸ்.ஐ. பிரபுவை மணிகண்டன் அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது.

இதையடுத்து, போலீஸார் சுட்டதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். ரவுடி அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த எஸ்.ஐ. பிரபு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரவுடியை போலீஸார் என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளிய சம்பவம் கொரட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி