ஆப்நகரம்

மரணத்திற்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீண்டும் உளறல்

ஹெச் ராஜாவின் தந்தை மறைவு குறித்து முதல்வர் வாழ்த்து தெரிவித்ததாக அமைச்சர் ஆர்.பி உதய குமார் உளறியுள்ளார்.

TNN 2 Oct 2017, 10:34 pm
சென்னை : ஹெச் ராஜாவின் தந்தை மறைவு குறித்து முதல்வர் வாழ்த்து தெரிவித்ததாக அமைச்சர் ஆர்.பி உதய குமார் உளறியுள்ளார்.
Samayam Tamil rp udhayakumar speech
மரணத்திற்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீண்டும் உளறல்


பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் இரு தினங்களுக்கு முன் மரணமடைந்தார். அவரது மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்ததாக, அமைச்சர் ஆர்.பி உதய குமார் உளறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், நாங்கள் எச் ராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்துள்ளோம். . அவரின் தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முதல்வர் எச். ராஜாவிற்கு போன் செய்து அவரின் மறைவிற்காக வருந்துகிறேன் என தெரிவித்தார் என கூறுவதற்கு பதிலாக, அவரின் மறைவிற்கு இரங்களும் வாழ்த்தும் தெரிவித்தார் என உதயகுமார் தவறுதலாக கூறினார்.

இதே போல நடிகர் விஜய குமாரின் மனைவி மஞ்சுலாவின் மறைவின் போது, விஜயகாந்த், அவரது மறைவிற்கு என் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

அடுத்த செய்தி