ஆப்நகரம்

தஞ்சையில் சிக்கிய ரூ.1 கோடி நகைகளை எடுத்துச் செல்ல அனுமதி

தஞ்சையில் சிக்கிய ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை, தீவிர சோதனைக்கு பின்னர், தேர்தல் பறக்கும்படையினர் எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.

TNN 4 Nov 2016, 5:01 pm
தஞ்சை: தஞ்சையில் சிக்கிய ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை, தீவிர சோதனைக்கு பின்னர், தேர்தல் பறக்கும்படையினர் எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.
Samayam Tamil rs 1 crore jewelery caught in thanjavur
தஞ்சையில் சிக்கிய ரூ.1 கோடி நகைகளை எடுத்துச் செல்ல அனுமதி


தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பதை கண்காணிக்க தேர்தல் பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் தஞ்சை தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் ரோந்து வந்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தஞ்சை மருத்துவகல்லூரி சாலையில் உள்ள சிந்தாமணி குடியிருப்பு அருகே பறக்கும்படையினர் துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த வேனில் டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர். வேனில் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தன. வேனில் இருந்தவர்கள் இந்த தங்க நகைகள் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் உள்ள ஒரு நகைக்கடைக்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்தனர். மேலும், ஆதாரத்திற்காக அவர்கள் ஜெராக்ஸ் காப்பியும் வைத்திருந்தனர். அதனை பறக்கும்படை குழுவினர் ஏற்கவில்லை. நகை கொண்டு செல்வதற்கான அசல் காப்பியை காட்டிவிட்டு எடுத்துச் செல்லுமாறு கூறி வேனை பிடித்து வைத்தனர்.

இதையடுத்து வேனில் வந்தவர்கள் வாட்ஸ்-ஆஃப் மூலம் அசல் காப்பியை பெற்று பறக்கும்படை குழுவினரிடம் காண்பித்தனர். அதன்பிறேகே, நகைகளை அதிகாரிகள் எடுத்துச்செல்ல அனுமதித்தனர். அதன் பின்னர் அவர்கள் நகைகளை கடைகளுக்கு எடுத்துச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Rs 1 crore jewelery caught in Thanjavur

அடுத்த செய்தி