ஆப்நகரம்

ஆர்.கே.நகரில் ரூ.13 லட்சம் பறிமுதல்

சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

TNN 16 Dec 2017, 5:25 pm
சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil rs 13 lakh seized in rk nagar
ஆர்.கே.நகரில் ரூ.13 லட்சம் பறிமுதல்


சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் நடைபெற உள்ளது. கடந்த முறை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா காரணமாக ரத்துசெய்யப்பட்டதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

இருப்பினும் ஆர்.கே.நகரில் இதுவரை ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்துள்ளது.

இந்நிலையில் இன்று ஆர்.கே.நகரில் தேர்தல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை நடத்திய சோதனையில் ரூ.13 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி