ஆப்நகரம்

ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 2.05 லட்சம்: பறக்கும் படையினர் பறிமுதல்!

சத்தியமங்கலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் சரியான ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ 2.05 லட்சத்தை பரிமுதல் செய்துள்ளனர்.

Samayam Tamil 21 Mar 2019, 12:12 pm
சத்தியமங்கலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் சரியான ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ 2.05 லட்சத்தை பரிமுதல் செய்துள்ளனர்.
Samayam Tamil hsalnda


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் எஸ்ஐ கணேசன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சத்தியிலிருந்து மைசூர் நோக்கி சென்ற காரை சோதனையிட்டபோது காரில் சென்ற கோபி அருகே உள்ள வடுகபாளையம் புதூரை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரு.1,39,500 பறிமுதல் செய்து சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக்கிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் குணசேகரன் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் உள்ள கிரானட் குவாரியில் மேனேஜராக பணிபுரிவதாகவும், பெங்களுரில் படிக்கும் தனது மகனுக்கு கல்லூரி கல்வி கட்டணம் கட்டுவதற்காக பணம் கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதேபோல் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கிருஷ்ணமுர்த்தி தலைமையில் சத்தி ரூ கோவை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

சத்தியமங்கலத்திலிருந்து கோவை நோக்கி காரில் சென்ற கோவையை சேர்ந்த மைக்கேல்வளன் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரு.65,500 பறிமுதல் செய்து சத்தியமங்கலம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

அடுத்த செய்தி