ஆப்நகரம்

பொள்ளாச்சியில் டாஸ்மாக் மேற்பாா்வையாளா் வீட்டில் கொள்ளை

பொள்ளாச்சி அருள்ஜோதி நகரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் குமார் என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 24 Jan 2019, 11:22 pm
பொள்ளாச்சி அருள்ஜோதி நகரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் குமார் என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Theft


பொள்ளாச்சி அருகே ஜோதிநகரில் உள்ள அருள் ஜோதி நகரை சேர்ந்தவர் குமார். இவர் கருமத்தம்பட்டியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் குரும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை வீடு தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.

அதனைத் தொடா்ந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ, துணிமணிகள் அனைத்தும் உடைக்கப்பட்டு அதிலிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனா்.

இதனைத் தொடா்ந்து அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய காவல் துறையினா் குழப்பமடைந்தனர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு தீ வைத்து சென்று விட்டதால் கட்டில் பீரோ, டிவி, பர்னிச்சர் பொருட்கள் உள்ளிட்ட ரூ 25, லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தனர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி