ஆப்நகரம்

மருத்துவ அலட்சியம்: ரூ.28 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 28.37 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாகர்கோயில் மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 2 Sep 2016, 3:31 pm
மதுரை: மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 28.37 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாகர்கோயில் மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil rs 28 lakh to womans kin who got laughing gas for oxygen in tamil nadu hospital
மருத்துவ அலட்சியம்: ரூ.28 லட்சம் இழப்பீடு தர உத்தரவு


கடந்த 201ஆம் ஆண்டு ருக்மணி(34), என்பவர் கருமுட்டை குழாயில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மறுநாள் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதையடுத்து ருக்மணிக்கு ஆக்ஸிஜன் வழங்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மருத்துவர்களின் அலட்சியத்தால் ஆக்ஸிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைட் கொடுக்கப்பட்டதால் ருக்மணியின் நிலை கவலைக்கிடமாக போனது. இதையடுத்து, மதுரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ருக்மணியின் கணவர் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமனறத்தில் பாதிக்கப்பட்ட ருக்மணியின் குடும்பத்துக்கு ரூ.28.37 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி