ஆப்நகரம்

கண்ணில் மிளகாய் பொடி தூவி டாஸ்மாக் ஊழியரிடமிருந்து ரூ. 4.60 லட்சம் பறிப்பு

கண்ணில் மிளகாய் பொடி தூவி டாஸ்மாக் ஊழியரிடமிருந்து ரூ. 4.60 லட்சம் பறிப்பு

Samayam Tamil 12 Nov 2018, 9:29 pm
டாஸ்மாக் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடி தூவி, மர்ம கும்பல் ஒன்று பணத்தை பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.
Samayam Tamil money-snatched
டாஸ்மாக் ஊழியரிடமிருந்து ரூ. 4.60 லட்சம் பறிப்பு


இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர், டாஸ்மாக் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ. 4.60 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேவுள்ள நெதிதலூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் திருச்சியில் டாஸ்மாக் கடை ஊழியராக பணியாற்றி வருகிறார். விற்பனை முடிந்த உடன் திருச்சியிலிருந்து தினமும் கரூரில் உள்ள தனது வீட்டுக்கு செல்வது அவரது வழக்கம்.

சம்பவம் நடந்த அன்று, வழக்கம் போல விற்பனை முடிந்த உடன், பெரியசாமி கரூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ஒத்தக்கடை என்ற பகுதியை அவர் நெருங்கிய போது, 6 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் பெரியசாமியை வழிமறித்தனர்.

உடனே எதிர்பாராத நேரத்தில் அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு, பெரியசாமி கையில் பிடித்திருந்த ரூ. 4.60 லட்சம் பணம் அடங்கிய பையை அந்த மர்ம கும்பல் பறித்துச் சென்றது.

தற்போது பணத்தை பறிக்கொடுத்த பெரியசாமி, குளித்தலை காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.. அவரது புகாரை பதிவு செய்த போலீசார், இசசம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி