ஆப்நகரம்

புதுக்கோட்டையில் நடத்தப்பட்ட மொய் விருந்தில் ரூ.4 கோடி வசூல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் நடத்தப்பட்ட மொய் விருந்தில் ரூ.4 கோடி வசூலாகி உள்ளது.

Samayam Tamil 26 Jul 2019, 11:28 am
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட மொய் விருந்தில் ஒரே நாளில் ரூ.4 கோடி வசூலாகி உள்ளது. கடந்த காலங்களில் ரூ.5 கோடி வசூலான நிலையில், கஜா புயல் காரணமாக இந்த வசூல் 4 கோடியாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil Moi Virundhu


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், வடநாடு மற்றம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் உள்ள கிராமங்களில் கடந்த 25 ஆண்டுகளாக மொய் விருந்து விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. நலிந்த நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், கல்யாணம், சடங்குகள் போன்ற விழாக்களுக்கு பணத்தேவை இருப்பவர்கள் இந்த மொய் விருந்தை நடத்துவது வழக்கம்.

Also Read: பிரியாணியில ‘லெக் பீஸ்’ காணோம்- அடிதடிக்கு வரிந்து கட்டும் அரசியல் கட்சிகள்!

இந்த விருந்தில் நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் கலந்து கொண்டு மொய் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மொய் விருந்தில் ரூ.5 கோடி வரை வசூலாகி வந்தது. இந்நிலையில், வடகாடு கிராமத்தில் நேற்று கிருஷ்ணமூர்த்தி என்பவர் மொய் விருந்து நடத்தியுள்ளார். 50 ஆயிரம் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு, ஒரு டன் ஆட்டுக்கறி பயன்படுத்தப்பட்டு சமையல் நடைபெற்றது.

Also Read: தமிழகத்தில் பரவலாக மழை: 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

இந்த விருந்தில் ரூ.4 கோடி வசூலாகி உள்ளது. மொய் விருந்திற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதுடன், துப்பாக்கி ஏந்திய 5 தனியார் பாதுகாவலர்களை கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பந்தலில் 14 இடங்களில் மொய் வசூல் நடைபெற்றது.

Also Read: மைத்ரேயன் விவகாரத்தில் பாஜக விதித்த அதிரடி உத்தரவு; என்ன செய்யப் போகிறது அதிமுக!

மேலும் கல்லாலங்குடியில் உள்ள ஒரு வங்கி கிளை சார்பில் பணம் எண்ணும் இயந்திரங்களைக் கொண்டு வங்கி ஊழியர்கள் உடனுக்குடன் மொய் தொகைகளை சரிபார்த்து வழங்கும் வகையில் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன் நடைபெற்ற மொய் விருந்தில் ரூ.5 கோடி அளவில் வசூலாகி இருந்த நிலையில், கஜா புயல் பாதிப்பு காரணமாக மொய் வசூல் 4 கோடியாக குறைந்துள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி