ஆப்நகரம்

வர்தா புயல்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம்

வர்தா புயலில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

TNN 12 Dec 2016, 10:45 pm
வர்தா புயலில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
Samayam Tamil rs 4 lakh will be given to family members of those who died due to cyclonevardah
வர்தா புயல்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம்


வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு நிலை வர்தா புயலாக உருவானது. இதன் காரணமாக இன்று காலை முதல் சென்னையில் சூறாவளிக்காற்றுடன் கனத்த மழை பெய்து வருகிறது. வர்தாவின் சூறாவளிக்காற்றுக்கு இதுவரை வர்தாவின் சூறாவளிக்கு இதுவரை 47 வீடுகளும், 3384 மரங்களும், 3400 மின்கம்பகளும் சேதமடைந்துள்ளன என்று தேசிய பேரிடர் மீட்புக் குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் இருவர், காஞ்சிபுரம் மற்றும் நாகப்பட்டிணத்தில் ஒருவர் உள்பட வர்தாவின் கோரத்தாண்டவத்திற்கு 4 பேர் பலியாயினர் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது வர்தாவின் கோரத்தாண்டவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Rs 4 lakh will be given to family members of those who died due to #CycloneVardah from state disaster relief fund - TN CM O. Panneerselvam

அடுத்த செய்தி