ஆப்நகரம்

வங்கி ஊழியர்கள் போராட்டம்; பொள்ளாச்சியில் ஒரே நாளில் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு

வங்கி ஊழியர் போராட்டத்தால், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 31 May 2018, 11:54 am
சென்னை: வங்கி ஊழியர் போராட்டத்தால், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Bank Strike


வங்கி நிர்வாகம் மற்றும் வங்கி தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பு இடையேயான ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மே 30, 31ஆம் தேதிகளில் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா வங்கி ஊழியர் சங்கம் சார்பில், காந்தி சிலை அருகே பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார்.

வங்கி ஊழியர்களின் 2 நாள் போராட்டத்தால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். காசோலை பரிவர்த்தனை, பணப்பட்டுவாடா உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. பொள்ளாச்சி தாலுகாவில் செயல்படும் 28 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

வங்கிகளின் 2 நாள் போராட்டத்தால், பொள்ளாச்சி பகுதியில் மட்டும் ரூ.50 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Rs.50 crore trade affected in pollachi by one day bank.

அடுத்த செய்தி