ஆப்நகரம்

சாலையோரம் கட்டுகட்டாக வீசப்பட்டிருந்த ரூ.500 நோட்டுகளால் மக்கள் அதிர்ச்சி

சாலையோரத்தில் 500 ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வீசப்பட்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

TNN 11 Oct 2016, 9:16 am
கடலூர் : சாலையோரத்தில் 500 ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வீசப்பட்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Samayam Tamil rs 500 note are was dumped in roadside
சாலையோரம் கட்டுகட்டாக வீசப்பட்டிருந்த ரூ.500 நோட்டுகளால் மக்கள் அதிர்ச்சி


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோழிப்பாக்கம் கிராமத்தின் சாலையோரம் நேற்று மாலை 500 ரூபாய் நோட்டுகள் பரவிக் கிடப்பதாக அப்பகுதி மக்களிடையே தகவல்கள் பரவியது.

இதனையடுத்து ஊர்மக்கள் அங்கு சென்று பார்த்தபோது எந்திரத்தால் ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது. சாலையோரத்தில் சிதறி கிடந்த 500 ரூபாய் நோட்டுக்கள் சிலர் வீட்டுக்கு அள்ளிச் சென்றனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதனை கைப்பற்றி கள்ளபணம் தயாரிக்கும் கும்பல் இந்த பணத்தை இங்கு வீசி சென்றிருக்குமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி