ஆப்நகரம்

இரண்டாவது தவணையும் வந்து சேர்ந்தது... 51 லட்சம் கொடுத்த ஆளுநர்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு தமிழக ஆளுநர் அளித்த 51 லட்ச ரூபாயும் வந்து சேர்ந்தது.

Samayam Tamil 9 Jun 2020, 7:46 pm
அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு தன் விருப்ப நிதியிலிருந்து, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அறிவித்த 51 லட்ச ரூபாய் நிதித்தொகையின் இரண்டாவது தவணைப் பணம் இன்று வந்து சேர்ந்தது.
Samayam Tamil WIA - ADYAR


சென்னை அடையாறிலுள்ள புற்றூநோய் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஹன் விருப்ப நிதியிலிருந்து சுமார் 51 லட்ச ரூபாய் நிதியளிப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி அறிவித்தார்.
இதன் முதல்கட்டத் தவணையாக சுமார் 11லட்ச ரூபாய் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாம் கட்டத் தவணையான 40 லட்ச ரூபாய் இன்று அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்திடம் சேர்க்கப்பட்டது. கொரோனா பேரிடர் காலத்தில் நோயாளிகளை கவனிக்கும் முயற்சியில் இந்தத் தொகை உதவிகரமானதாக இருக்கும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி