ஆப்நகரம்

துப்பாக்கி முனையில் கொள்ளை: திருடனை உடனே பிடித்த போலீஸ்!

சென்னையில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளையடிக்க முயன்றவரை போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 23 Apr 2018, 3:07 pm
சென்னையில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளையடிக்க முயன்றவரை போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
Samayam Tamil 15244744557425


சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் இன்று துப்பாக்கியுடன் நுழைந்த நபர், துப்பாக்கியை காட்டி மிரட்டி 6 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துள்ளார். அபேஸ் செய்த பணத்துடன் தப்பி ஓடிய கொள்ளையனை பொதுமக்கள் மற்றும் போலீசார் விரட்டிப்பிடித்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குற்றவாளி கேளம்பாக்கத்தைச் சேர்ந்த சுனில் குமார் யாதவ் என்பது தெரிந்துள்ளது. இந்தியன் வங்கியில் கொள்ளையடிப்பதற்கு முன்பாக, அங்குள்ள மற்றொரு வங்கியில் கொள்ளையடிக்க முயன்றுள்ளதாகவும் தெரிகிறது.

கொள்ளையனிடமிருந்து இரண்டு துப்பாக்கி, மொபைல் போன் போன்றவற்றை பறிமுதல் செய்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி