ஆப்நகரம்

ஆர்எஸ்எஸ் நபர் மீது தாக்குதல்: கோவையில் மீண்டும் பதற்றம்

கோவை சுந்தராபுரம் அருகே ஆர்எஸ்எஸ் பிரமுகர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளதையடுத்து, மாநகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 12 Mar 2020, 12:39 am
கோவையில் சமீபகாலமாகவே அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்து அமைப்பினரும் இஸ்லாமிய அமைப்பினரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
Samayam Tamil ஆர்எஸ்எஸ் நபர் மீது தாக்குதல்: கோவையில் மீண்டும் பதற்றம்


இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் இரு தரப்பினரிடமும் அமைதி நிலவ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஆனால் பேச்சுவார்த்தை நடத்திய ஒரே நாளில் மீண்டும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உள்ளார்.

கோவை: இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு...

கோவை சுந்தராரபுரம் பகுதியில் ஆயில் நிறுவனம் நடத்தி வருபவர் சூரியபிரகாஷ் (30) ஆர்எஸ்எஸ் பிரமுகராக உள்ளார்.

இவர் நேற்று மாலை(மார்ச் 11) வழக்கம்போல பணியில் இருந்தார். அப்போது திடீரென அடையாளம் தெரியாத நான்கு பேர் அவரது நிறுவனத்திற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர்.

முடங்கியது கோவை! இஸ்லாம், இந்து சமூகத்தினர் போராட்டம்...

உடனே அவர் அருகே உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை பந்தய சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். தொடரும் தாக்குதல் சம்பவங்களால் கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி