ஆப்நகரம்

பல்வேறு வதந்திகளுக்கு இடையே ரூபெல்லா தடுப்பூசி முகாம் தொடங்கியது

பல்வேறு வதந்திகளுக்கு இடையே தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் இன்று தொடங்கியது.

TNN 6 Feb 2017, 3:21 pm
சென்னை: பல்வேறு வதந்திகளுக்கு இடையே தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் இன்று தொடங்கியது.
Samayam Tamil rubella vaccine campaign launched today
பல்வேறு வதந்திகளுக்கு இடையே ரூபெல்லா தடுப்பூசி முகாம் தொடங்கியது


ரூபெல்லா நோயும் அம்மை நோய்களில் ஒன்று தான். காற்றில் பரவும் தன்மை கொண்ட இக்கிருமி நோய் எதிர்ப்பு சக்தி குறைவான குழந்தைகளை எளிதில் தாக்கும். கர்ப்பிணிகளுக்கு நோய்த் தாக்கம் இருந்தால், கருவை பெரியளவில் பாதித்து பிறவிலேயே குழந்தைக்கு கண்புரை, காதுகேளாமை, இதய பாதிப்பு ஏற்பட்டு குழந்தை இறக்க நேரிடும்.

இந்த இரு நோய்களை தடுப்பதற்காகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் ரூபெல்லா மீசல்ஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கு முன்னர் இந்தத் தடுப்பூசியை போட்டிருந்தாலும், எம்ஆர் எனப்படும் இந்த ரூபெல்லா தடுப்பூசியை போடலாம்.

இதனிடையே, தடுப்பூசிகள் போடக் கூடாது என ஒரு சிலரும், தடுப்பூசிகள் போட வேண்டும் என ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், தடுப்பூசிகள் குறித்து பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவின.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு எம்.ஆர் தடுப்பூசி (தட்டம்மை – ரூபெல்லா வேக்ஸின்) போட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, பல்வேறு வதந்திகளுக்கு இடையே, தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் இன்று தொடங்கியது. இந்த முகம் வருகிற 28-ம் தேதி வரை நடைபெறும்.

9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த முகாமில் தடுப்பூசி போடப்படும். ஏற்கெனவே தடுப்பூசி போட்டிருந்தாலும், கூடுதலாக ஒரு தவணை தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படும். இரண்டு வாரத்தில் அனைத்து பள்ளிகளிலும், மூன்றாம் வாரத்தில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களிலும் நடைபெறவுள்ளது. இறுதியாக நான்காவது வாரத்தில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி விடுபட்ட குழந்தைகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 கோடியே 80 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்ட ஒரு வாரத்துக்கு பிறகு, குழந்தைகளுக்கு காய்ச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படும் எனவும், ஆனால், அது குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Rubella vaccine campaign launched today

அடுத்த செய்தி