ஆப்நகரம்

பாலியல் வழக்கில் இவங்களுக்கும் தொடர்பா? அவதூறு பரப்பிய நவீன்குமார் மீது வழக்கு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எஸ்.பி.வேலுமணி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அவதூறு பரப்பியதாக நவீன்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 15 Mar 2019, 9:33 am
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எஸ்.பி.வேலுமணி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அவதூறு பரப்பியதாக நவீன்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil sp


பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடுமைக்குக் கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Also Also Read This:பொள்ளாச்சி ஜெயராமனின் மகனிடம் விசாரணை நடத்துவோம்: மகளிர் ஆணையம்'

Also Also Read This: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - அடிதடிக்கு மட்டும் போலாமா பார் நாகராஜ்!


மேலும், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அவதூறு பரப்பிய நவீன்குமார் மீது குனியமுத்தூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி