ஆப்நகரம்

சுவாமியின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து: முரளிதர் ராவ்

சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

TNN 10 Oct 2016, 1:59 pm
சென்னை: சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil s swamys comment about president rule in tn is his personal comment muralidhar rao
சுவாமியின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து: முரளிதர் ராவ்


இதுகுறித்து அவர் கூறியதாவது: பொறுப்பு முதல்வரை நியமிப்பது தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை. சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. காவிரி விவகாரத்தில் இரு மாநிலத்துக்கும் சாதகமான முடிவை மத்திய அரசு எடுக்கும். இந்து தலைவர்கள் தாக்கப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றார்.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசில் ஒழுங்கற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்குத் திரும்பும் வரை, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி சட்டப்பேரவையை முடக்கி வைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இது அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பலையை கிளம்பிய நிலையில், சுவாமியின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

S.Swamy's comment about president rule in TN is his personal comment: Muralidhar rao #JayaHealth

அடுத்த செய்தி