ஆப்நகரம்

எஸ்.வி சேகர் மிகப்பெரிய குற்றவாளி இல்லை - அமைச்சர் மாஃபா பாண்டியன்

அமீர் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியன், எஸ்வி சேகர் மிகப்பெரிய குற்றவாளி இல்லை என தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Jun 2018, 9:17 pm
சென்னை : அமீர் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியன், எஸ்வி சேகர் மிகப்பெரிய குற்றவாளி இல்லை என தெரிவித்துள்ளார்.
Samayam Tamil pandiarajan


தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் துறை அமைச்சர் மாஃபா பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும் போது :

அமீர் மீதான வழக்கு வேறு, எஸ் வி சேகர் வழக்கு வேறு. எஸ் வி சேகர் அவ்வளவு பெரிய குற்றவாளி இல்லை. அவர் மீதான வழக்கில் சட்டம் தன் கடமையை செய்யும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெண் பத்திரிக்கயாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ்வி சேகரின் முன் ஜாமின் மனு தள்ளுபடை செய்யப்பட்ட நிலையில், வரும் ஜூன் 20ல் ஆஜராக சம்மன் அனுபப்பட்டுள்ளது. எழும்பூர் நீதிமன்ற தலைமை நீதியாளர் முன் வந்த வழக்கில், எஸ்வி சேகர் ஜூன் 20ம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி