ஆப்நகரம்

சபரிமலை பக்தர்கள் ஹேப்பி; வெளியானது சூப்பர் அறிவிப்பு!

சபரிமலை மலை பக்தர்களுக்கு செம ஹேப்பியான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Samayam Tamil 22 Nov 2022, 1:49 pm
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதையொட்டி பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அலைமோதி வருகின்றது. இதன் 6வது நாளான நேற்று தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தலைமையிலான குழுவினர் கோயிலில் உள்ள சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகளில் ஒன்றாக கருதப்படும் களப பூஜை, களபம் சார்த்தல், களப அபிஷேகம் நடத்தினர்.
Samayam Tamil lord ayyappa


இதன் பிறகு மாலை 4 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே சன்னிதானம் அருகே 18 படி ஏறி வரும்போது பக்தர்களுக்கு மூச்சு திணறல், நெஞ்சுவலி உள்ளிட்ட திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அவசர சிகிச்சை மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுதாரர்கள் ஹேப்பி; பொங்கலுக்கு சூப்பர் அறிவிப்பு!
இந்த அவசர சிகிச்சை மையத்தில் பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை கடந்தும் கூட ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பால் நடைப்பந்தலில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.

சபரிமலையில் விடுமுறை நாளான சனிக்கிழமை மட்டும் 75 ஆயிரம் பக்தர்கள், ஞாயிற்றுக்கிழமை அன்று 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் முடித்து திரும்பி உள்ளனர்.

இப்படியாக, ஐயப்பனை தரிசிக்க வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும் நிலையில் 6 நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

பிரியாணி கடை மாஸ் ஆஃபர்; திணறிப்போன திருப்பூர்!
இந்த நிலையில் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இன்று முதல் சாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி அளிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்கமாக மாலை நேரத்தில் 4 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், இன்று 22ம் தேதி முதல் மாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என, கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சபரி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் 6 நாட்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று முதல் ஐயப்பனை கூடுதலாக ஒரு மணி நேரம் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது ஐயப்ப பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்று உள்ளது.

அடுத்த செய்தி