ஆப்நகரம்

சட்டத்தை கையில் எடுப்பது குடிமகனின் அடையாளம் கிடையாது – கமல்ஹாசன்

சட்டங்களை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் கிடையாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 11 May 2018, 9:12 pm
சட்டங்களை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் கிடையாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கருத்து தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Kamal Haasan


அண்மை காலமாக குழந்தை கடத்தல் கும்பல் அதிகரித்துள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. இதன் விளைவாக வட மாவட்டங்களில் பொதுமக்கள் வட மாநில இளைஞா்கள், மன நலம் பாதிக்கப்பட்டவா்களை கடுமையாக தாக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இரு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் முகவரி விசாரித்த பெண் சந்தேகத்தின் போில் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கருத்து தொிவித்துள்ளா்ா. அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், “வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம். சட்டத்தை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று.காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்” என்று கருத்து தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி