ஆப்நகரம்

பெண்கள் பாதுகப்பை உறுதிசெய்ய புதிய செயலி: சென்னை இளைஞர்களின் புதிய முயற்சி!

சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர்.

Samayam Tamil 11 Jun 2018, 1:53 pm
சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர்.
Samayam Tamil Eve-teasing-confessions


சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள்,பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிட “Safetipin App” என்ற செயலியைஉருவாக்கியுள்ளனர். இந்த செயலி தற்போது சோதனையில் உள்ளது. இந்த செயலியை நாம் பதிவிறக்கம் செய்தவுடன், நாம் எங்கு செல்கிறோம் என்ற இடத்தை அதில் பதிவிட வேண்டும். அந்த செயலியானது எந்த சாலையில் பெண்களுக்கு பிரச்சனைகள் வருவது குறைவு என்று விவரங்களை நமக்கு சொல்லும். அதேபோல் இந்த செயலியை பயன்படுத்துவோர், அவர்கள் இருக்கும் இடத்தை பற்றிய பிரச்சனைகளையும், அங்கு பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ஏதேனும் முயற்சிகள் எடுக்கப்பட்டனவா என்பதை பதிவு செய்ய வேண்டும்.

இது குறித்து செயலியை உறுவாக்கிய குழுவின் தலைவர் காவ்யா மேனன் கூறியதாவது

‘நிர்பயாவைப்போல் இனி எந்த பெண்ணும் பாலியல் வன்கொடுமை செய்யப்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த செயலியை உருவாக்கியுள்ளோம். இதுதொடர்பாக ஒரு நிகழ்ச்சி வருகின்ற 16 ஆம் தேதி நடைபெறுகிறது. அண்ணா நகர், சோழிங்க நல்லூர், தாம்பரம், திருவான்மியூர் போன்ற இடங்களில் உள்ளவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்ள விரும்புவோர்8122241688 என்ற வாட்ஸ் எண்ணுக்கு குறுஞ் செய்தி அனுப்ப வேண்டும் ’ என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி