ஆப்நகரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகுந்த மனவலியை ஏற்படுத்தியது; சகாயம் ஐஏஎஸ்!

தூத்துக்குடி சம்பவம் குறித்து, சகாயம் ஐஏஎஸ் தனது மன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 27 May 2018, 2:12 pm
சென்னை: தூத்துக்குடி சம்பவம் குறித்து, சகாயம் ஐஏஎஸ் தனது மன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil Sagayam IAS
சகாயம் ஐஏஎஸ்


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, அப்பகுதி மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்நிலையில் 100ஆம் நாள் போராட்டத்தின் போது, ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களினால், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் மிகுந்த மனவலியும், மனவேதனையும் அளிப்பதாக சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தூத்துக்குடி சம்பவத்தால் இரண்டு நாட்களாக எனக்கு எல்லையில்லா அளவிற்கு வேதனை ஏற்பட்டது. இதனை எண்ணிப் பார்க்கையில், நமது தமிழ்ச் சமூகத்தில் வாழ்வாங்கு வாழவேண்டிய 17-23 வயதுடைய பிள்ளைகள் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியிருக்கிறார்கள்.

நான் சுதந்திர நாட்டின் குடிமகன். என சக குடிமக்களின் துயரத்திலும், சோகத்திலும் பங்கெடுக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் தமிழ்ச் சமூகத்தின் அறம் சார்ந்த நியாயமான முன்னெடுப்புகளுக்கு என்று, என் தார்மீக ஆதரவுண்டு என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

Sagayam IAS condemns Tuticorin Firing in Sterlite protest.

அடுத்த செய்தி