"எப்படி விட்டுக் கொடுப்பது, எப்படி அவரிடத்தில் போவது என, பகைமை பாராட்டாமல், மக்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவை எடுக்க வேண்டும், என அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்களுக்கு சைதை துரைசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக அமைப்புச் செயலாளர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அதிர்ச்சியை அளித்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு, முதல்வர், புதிய முதல்வர் என தினமும் அ.தி.மு.க., செய்திகள் பிரதானப்படுத்தப்பட்டு ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் உள்ளது. இது இந்த இயக்கம் தொடங்குவதற்கும், வளர வேண்டும் என உயிரை பணயம் வைத்து பணியாற்றியவர்களுக்கு வேதனை அளிக்கிறது.
ஆயிரம் உண்டிங்கு சாதி, அதில் அன்னியர் புகுவது என்ன நீதி என பாரதி சொன்னது போல நமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள், கட்சியின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டுமே தவிர, தனிநபர் ஆதாயத்துக்காக இருக்கக் கூடாது. இன்று நாம் எவ்வளவு பெரிய சிக்கலில், எவ்வளவு பெரிய சங்கடத்தில் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.
ஓர் இழப்பு இன்னுமொரு உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதை புரிந்துகொண்டு, வாய்ப்புகளை நழுவ விடாமல், நம்முடைய தொண்டர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை ஆதரித்த பொதுமக்கள் மகிழ்ச்சியடையத்தக்க வகையான ஒரு முடிவை நீங்கள் மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
ஜெயலலிதா இருந்தபோது என்ன பாச உணர்வோடு இருந்தோமோ அந்த நிலைக்கு வாருங்கள். 131 பேர் அமர்ந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுப்பதில் என்ன சங்கடம். நாம் எல்லாரும் சகோதரர்களாகத்தானே பழகினோம். ஆனால் இந்த அசாதாரண சூழல் கட்சியில் நிலவும்போது, ஒருவருக்கொருவர் விட்டு கொடுப்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என கருதுகிறேன்.
எனவே, எப்படி விட்டுக் கொடுப்பது, எப்படி அவரிடத்தில் போவது என, பகைமை பாராட்டாமல் கடமை உணர்ச்சியுடன் இந்த கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக நீங்கள் அனைவரும் ஒத்துழைப்போடு, பொதுமக்கள் எதிர்பார்க்கின்ற இந்த நல்ல முடிவினை, கட்சி பிளவுபடவில்லை - ஆட்சி பிளவுபடவில்லை.. ஒற்றுமையுடன் இந்த ஆட்சி தொடர்கிறது என்ற நல்ல செய்தியை நாட்டுக்கு சொல்லுங்கள். ’என அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்களை சைதை துரைசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக அமைப்புச் செயலாளர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அதிர்ச்சியை அளித்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு, முதல்வர், புதிய முதல்வர் என தினமும் அ.தி.மு.க., செய்திகள் பிரதானப்படுத்தப்பட்டு ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் உள்ளது. இது இந்த இயக்கம் தொடங்குவதற்கும், வளர வேண்டும் என உயிரை பணயம் வைத்து பணியாற்றியவர்களுக்கு வேதனை அளிக்கிறது.
ஆயிரம் உண்டிங்கு சாதி, அதில் அன்னியர் புகுவது என்ன நீதி என பாரதி சொன்னது போல நமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள், கட்சியின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டுமே தவிர, தனிநபர் ஆதாயத்துக்காக இருக்கக் கூடாது. இன்று நாம் எவ்வளவு பெரிய சிக்கலில், எவ்வளவு பெரிய சங்கடத்தில் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.
ஓர் இழப்பு இன்னுமொரு உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதை புரிந்துகொண்டு, வாய்ப்புகளை நழுவ விடாமல், நம்முடைய தொண்டர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை ஆதரித்த பொதுமக்கள் மகிழ்ச்சியடையத்தக்க வகையான ஒரு முடிவை நீங்கள் மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
ஜெயலலிதா இருந்தபோது என்ன பாச உணர்வோடு இருந்தோமோ அந்த நிலைக்கு வாருங்கள். 131 பேர் அமர்ந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுப்பதில் என்ன சங்கடம். நாம் எல்லாரும் சகோதரர்களாகத்தானே பழகினோம். ஆனால் இந்த அசாதாரண சூழல் கட்சியில் நிலவும்போது, ஒருவருக்கொருவர் விட்டு கொடுப்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என கருதுகிறேன்.
எனவே, எப்படி விட்டுக் கொடுப்பது, எப்படி அவரிடத்தில் போவது என, பகைமை பாராட்டாமல் கடமை உணர்ச்சியுடன் இந்த கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக நீங்கள் அனைவரும் ஒத்துழைப்போடு, பொதுமக்கள் எதிர்பார்க்கின்ற இந்த நல்ல முடிவினை, கட்சி பிளவுபடவில்லை - ஆட்சி பிளவுபடவில்லை.. ஒற்றுமையுடன் இந்த ஆட்சி தொடர்கிறது என்ற நல்ல செய்தியை நாட்டுக்கு சொல்லுங்கள். ’என அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்களை சைதை துரைசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.