ஆப்நகரம்

அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி!

திருப்பதி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Samayam Tamil 25 Mar 2018, 2:06 pm
திருப்பதி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil bus


சேலத்திலிருந்து 50க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்று திருப்பதி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்தை வெங்கடாசலம் என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது, திருப்பதி அருகிலுள்ள பேரூர் என்ற இடத்தில் பேருந்தி சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், சாலையோரத்தில் இருந்த தடுப்பின் மீது மோதியதால் பேருந்து தலைகீழாக கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் டிரைவர் வெங்கடாசலமும், பேருந்தில் பயணம் செய்த சுந்தரராஜ் என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அடுத்த செய்தி