ஆப்நகரம்

சிசிடிவி உதவியால் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது - அசத்திய சேலம் போலீசார்!

24 மணி நேரத்திற்குள் போலீசார் குற்றவாளிகளை கைது செய்த சம்பவத்தால், பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Samayam Tamil 13 Apr 2019, 7:45 am
தமிழகம் முழுவதும் குற்றச் செயல்களைத் தடுக்க சிசிடிவி பொருத்த வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் அஸ்தம்பட்டி போலீசார், சிசிடிவி உதவியுடன் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கையும், களவுமாக பிடித்துள்ளனர்.
Samayam Tamil Salem theft


அவர்களிடம் இருந்து ரூ.4.5 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் மீட்டுள்ளனர். இந்த செயலால் சேலம் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி காவல் நிலையச் சரகம் மரவனேரி பகுதியில் லிட்டில் ஜீனியஸ் ப்ளே ஸ்கூல் மற்றும் ஃப்ரீ ஸ்கூல் உள்ளது.

இந்தப் பள்ளியைச் சேர்ந்த ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அருள் முருகன் என்பவர், அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வடக்கு சரகக் குற்றப்பிரிவு உதவி ஆணையர் திரு டி.தினகரன் அவர்கள் தலைமையிலான போலீசார், சிசிடிவி கேமரா உதவியுடன் குற்ற வழக்கில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்தனர்.

இதையடுத்து சேலம் பொன்னமாப்பேட்டை பகுதியை சேர்ந்த கே.ரகுபதி(26), மாதேஷ்(41) ஆகிய குற்றவாளிகளை கைது செய்து, சுமார் ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி