ஆப்நகரம்

எடப்பாடி கோட்டையில் ஓட்டை: சேலத்தில் கெத்து காட்டும் சசிகலா

சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை தன் பக்கம் வளைக்கும் வேலையில் சசிகலா ஈடுபட்டுள்ளார்.

Samayam Tamil 22 Mar 2022, 7:16 am
அதிமுகவை கைப்பற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சசிகலா அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றாலும் சத்தமில்லாமல் தனது ஆதரவாளர்கள் படையை அதிகரித்து வருகிறார்.
Samayam Tamil sasikala  edappadi palanisamy


சசிகலா எங்கே செல்கிறார், யாரையெல்லாம் அவர் சென்று சந்திக்கிறார், அவரை யாரெல்லாம் வந்து சந்திக்கின்றனர் என்கிற முழு விவரத்தையும் அதிமுக தலைமை உடனுக்குடன் பெற்று வருகிறது. சசிகலாவை சந்திக்கும் அதிமுகவினர் உடனடியாக கட்சியிலிருந்து இரட்டை தலைமையால் நீக்கப்படுகின்றனர்.

முதலில் ஓரிருவர் நீக்கப்பட்ட நிலையில் தற்போது நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையே சுமார் ஐநூறுக்கு மேல் இருக்கும் என்கிறார்கள். இவர்கள் என்ன செய்துவிடப்போகிறார்கள் என ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தீவிர யோசனையில் உள்ளார்.
ராஜ கண்ணப்பன் பதவி பறிபோகிறதா? ஸ்டாலின் எடுக்கும் அதிரடி ஆக்‌ஷன்!
சசிகலாவை சென்று சந்திப்பவர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். கட்சிக்கு உழைத்த மூத்தவர்களாகவும், எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி என்ன நிகழக்கூடாது என நினைத்தாரோ அதுவே தற்போது நிகழ்ந்து வருகிறது. சசிகலாவை தென் மாவட்டத்தினர் சிலர்தான் சந்திக்கின்றனர். இதன் பின்னால் அவரது சமூகம் இருக்கிறது. அதிமுக ஒரு சமூகத்துக்கான கட்சி அல்ல என்ற பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு இதற்கு முன்னர் முன்னெடுத்தது. ஆனால் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சசிகலாவை சந்திக்கின்றனர்.

குறிப்பாக சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தஞ்சாவூர் சென்று சசிகலாவை சந்தித்திருப்பது எடப்பாடி பழனிசாமி வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
சசிகலா Vs டிடிவி தினகரன்: ரகசியமாய் சிரிக்கும் எடப்பாடி!
எடப்பாடி சுரேஷ் தலைமையிலான குழு சசிகலாவை சந்தித்துள்ளது. எம்ஜிஆர் காலத்திலேயே கட்சியில் இணைந்து பணியாற்றிய எடப்பாடி சுரேஷ் பல்வேறு விமர்சனங்களை பழனிசாமி மீது வைக்கிறார். அதேபோல் மகளிரணி முக்கிய நிர்வாகிகளும் சசிகலாவை சந்தித்து அவரது தலைமையில் அதிமுக பலமடைய வேண்டும் என்கிறார்கள்.

ஆரம்பத்தில் தர்மயுத்தம் தொடங்கி சசிகலாவுக்கு எதிராக அணி அமைத்தவர் ஓபிஎஸ். ஆனால் அவரைவிட அதிக துரோகம் செய்தது எடப்பாடி பழனிசாமிதான் என்பது எடப்பாடி சுரேஷ் மற்றும் அவருடன் சென்றவர்களின் கருத்தாக இருக்கிறது.

அடுத்த செய்தி