ஆப்நகரம்

கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

சேலம் மாவட்டம் கோகுல் ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதைத் தொடா்ந்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Jun 2019, 4:08 pm
சேலம் மாவட்டம் கோகுல் ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதைத் தொடா்ந்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Yuvraj Gokul


சேலம் மாவட்டம் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் என்ற இளைஞர், கடந்த 2015ம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்படி வழக்கு சிபிசிஐடி காவல் துறையினரால் நாமக்கல் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கோகுல்ராஜ் தாயார் சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்ற கோரி தொடா்ந்த வழக்கின் அடிப்படையில், வழக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடபட்டது. இந்த விசாரணை கடந்த 3ம் தேதி முதல் விசாரணைக்கு வந்தது.

அப்போது திருச்சி சிறையில் இருந்து யுவராஜூம், சேலம் சிறையில் இருந்து 12 பேர், கோவை சிறையிலிருந்து ஒருவர் ஜாமீனில் வெளியே உள்ள செல்வராஜ் உள்ளிட்ட 15 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி மீரா சுமதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் யுவராஜ் தவிர மற்றவர்க்களை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு இன்று ஓத்தி வைத்திருந்தனர்.

இன்று இந்த வழக்கு விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மீராசுமதி முன் விசாரணைக்கு வந்தபோது குற்றம் சுமத்தப்பட்ட யுவராஜ் தரப்பில் வழக்கு குறித்து பதிலறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கை வருகிற 11ந் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஒத்தி வைத்து நீதிபதி மீரா சுமதி உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி