ஆப்நகரம்

சேலத்தில் மூன்றாவது நாளாக ரயிலை சிறைப்பிடித்து அட்டூழியம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சேலத்தில் நடைபெறும் போராட்டத்தில் இளைஞர்கள் மூன்றாவது நாளாக ரயிலை சிறைபிடித்து வைத்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.

TNN 21 Jan 2017, 3:49 pm
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சேலத்தில் நடைபெறும் போராட்டத்தில் இளைஞர்கள் மூன்றாவது நாளாக ரயிலை சிறைபிடித்து வைத்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.
Samayam Tamil salem jallikattu protesters rail roko halts local railway transport
சேலத்தில் மூன்றாவது நாளாக ரயிலை சிறைப்பிடித்து அட்டூழியம்


ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி சேலத்தில போராட்டம் மேற்கொண்டுள்ள இளைஞர்கள் வியாழக்கிழமையன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். பெங்களூர் – காரைக்கால் விரைவு ரயிலை மறித்த அவர்கள் மூன்றாவது நாளாக ரயிலை சிறை பிடித்து வைத்துள்ளனர்.

நேற்று, ரயிலை தாக்கி பல பாகங்களை உடைத்து நொக்கி வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றிய அவர்கள் எஞ்சின் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் எஞ்சினில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டு விபத்து நேரும் அபாயம் ஏற்பட்டது. இதையறிந்த, காவல்துறையினர் எரிபொருள் கசிவினால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க சோப்பு நுரையை அவ்விடத்தில் பரப்பினர். ரயில்வே ஊழியர்கள் உடைந்த ரயில் பாகங்களை சரிசெய்து வருகின்றனர்.

மூன்று நாளாக ரயிலை சிறைபிடித்து வைத்திருப்பதற்குக் காரணம் மத்திய அரசின் கவனம் பெற வேண்டும் என்பது தான் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அவர்களது அத்துமீறலால் உள்ளூர் ரயில்கள் முற்றிலும் இயங்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், சில ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்படுகின்றன.

அடுத்த செய்தி