ஆப்நகரம்

சேலம் காஞ்சி சங்கர மடம் மீது தாக்குதல்; 3 பேரை கைது செய்து விசாரணை!

காஞ்சி சங்கர மடம் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 21 Mar 2018, 12:58 pm
சேலம்: காஞ்சி சங்கர மடம் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil Salem Kanchi Sankara Madam
காஞ்சி சங்கர மடம்


திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை இட்டார்.

அதில், லெனின் சிலை போல் தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்றார். இதையடுத்து அட்மின் மீது குற்றம்சாட்டி, பதிவை ஹெ.ராஜா நீக்கினார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியார் சிலைகள் தாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மரவனேரி பகுதியில் உள்ள காஞ்சி சங்கரமடம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவர்கள் மின் விளக்குகளை உடைத்தும், பதாகைகளை கிழித்தும் சென்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த அஸ்தம்பட்டி போலீசார், நங்கவள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணன், ராஜேந்திரன், மனோஜ் ஆகியோரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Salem Kanchi Sankara Madam was attacked by unknown persons.

அடுத்த செய்தி