ஆப்நகரம்

சேலத்தில் 103 டிகிரி வெயில்: மக்கள் அவதி!

சேலம் மாவட்டத்தில் நேற்று 103.5 டிகிரி வெயில் பதிவானது. மேலும் சாலையில் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Samayam Tamil 26 Mar 2019, 5:29 pm
சேலம் மாவட்டத்தில் நேற்று 103.5 டிகிரி வெயில் பதிவானது. மேலும் சாலையில் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Samayam Tamil images


தமிழகத்தில் வெயில் காலம் நெருங்குவதால் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 25 முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வழக்கத்தைவிட 2 முதல் 3 செல்ஷியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஏற்கனவே நெல்லை, தர்மபுரி, மதுரை, திருச்சி போன்ற இடங்களில் சில நாட்களுக்கு முன் 100 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 103 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். காலையிலேயே வெயில் சுட்டெரித்ததால் பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் மற்றும் வயதானவர்கள் பாதிக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி