ஆப்நகரம்

சேலம்: நள்ளிரவில் நடைபெற்ற விபத்தில் நேபாளப் பயணிகள் உயிரிழப்பு!

சேலம் நரிப்பள்ளத்தில் நள்ளிரவில் நடைபெற்ற விபத்தில் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Samayam Tamil 20 Feb 2020, 11:00 am
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நடைபெற்ற கோர விபத்தில் 25 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் நரிப்பள்ளம் பகுதியில் நடைபெற்ற மற்றொரு விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
Samayam Tamil நள்ளிரவில் நடைபெற்ற விபத்தில் நேபாளப் பயணிகள் உயிரிழப்பு


நேபாளம் தலைநகர் காட்மாண்டுவைச் சேர்ந்த 33 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். தமிழ்நாட்டில் அவர்கள் நேற்று கன்னியாகுமரி உள்பட பல பகுதிகளை பார்வையிட்டனர். பின் அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஆம்னி பேருந்தில் புறப்பட்டனர்.

அவினாசி: நெஞ்சை பதறவைத்த கோரவிபத்து - அதிகரிக்கும் உயிர் பலி!

அந்தப் பேருந்து நள்ளிரவு 1 மணி அளவில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் நரிப்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அருகில் உள்ள காளியம்மன் கோவில் மண்டபத்தில் தங்கிவிட்டு அங்கிருந்து காலையில் புறப்பட்டு செல்ல முடிவு செய்தனர்.

இதையடுத்து நரிப்பள்ளம் பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை திருப்பியபோது பெங்களூருவில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்வதற்காக அதிவேகமாக வந்த மற்றொரு ஆம்னி பேருந்து மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

Indian 2 Accident: மிகக் கொடூரமான விபத்து; எனது வலியை விட அவர்களின் துயரம் பன்மடங்கு - கமல் ஹாசன்!

இதில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து கவிழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், காவலர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இருவரின் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளது.

அடுத்த செய்தி