ஆப்நகரம்

போலீஸ்காரங்களே! என் மாட்டைக் கண்டுபிடிச்சு கொடுங்க - கதறும் பால் வியாபாரி!

தன்னுடைய காணாமல் போன 3 மாடுகளைக் கண்டுபிடித்து தரக்கோரி, பால் வியாபாரி ஒருவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 25 Feb 2019, 10:27 pm
திரைப்படம் ஒன்றில் தன்னுடைய கிணற்றைக் காணவில்லை என்று வடிவேறு போலீசாரிடம் புகார் அளிப்பார். அது ஒரு நகைச்சுவையான காட்சி. ஆனால் நிஜ வாழ்வில் இதுபோன்ற சம்பவங்களைக் காணும் போது மனம் விட்டு சிரிக்க முடிவதில்லை.
Samayam Tamil Cows Missing


ஏனெனில் புகாரின் பின்னணி அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சமீபத்தில் சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் செருப்பு காணவில்லை என்று புகார் ஒன்று வந்துள்ளது.

அதேபோல் சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பால் வியாபாரி கோட்டீஸ்வரன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னுடைய இரு பசுக்கள் மற்றும் ஒரு காளை மாட்டைக் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், என்னுடைய மாடு இருக்கும் இடத்தை போலீசாரிடம் தெரிவித்து விட்டேன். ஆனாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்.

அவரது புகாரை போலீசார் ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது பிறருக்கு நகைப்பை ஏற்படுத்தினாலும், மாடுகள் அந்த வியாபாரியின் வாழ்வாதாரம் என்பதில் ஐயமில்லை.

அடுத்த செய்தி