ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு முதல் நகர்ப்புறத் தேர்தல் வரை... இன்றைய செய்திகள் 14.01.2020

ஜல்லிக்கட்டு முதல் நகர்ப்புறத் தேர்தல் வரை... இன்றைய செய்திகள் 14.01.2020

Samayam Tamil 14 Jan 2020, 7:13 pm
அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு; உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
Samayam Tamil Tamil_News




நடப்பாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை அவனியாபுரத்தில் 15ஆம் தேதியும், பாலமேட்டில் 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் கோலாகலமாக நடைபெறவுள்ளன. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு குழு அமைக்கும் உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து ஏ.கே.கண்ணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை நாளை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போகி கொண்டாட்டம்: அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு!



இன்று அதிகாலை முதலே போகிப் பண்டிகையை கொண்டாடியதால் சென்னை முழுக்க காற்று மாசுபாடு அதிகரித்தது. பழைய பொருள்களை எரித்து போகி கொண்டாடுவதால் எழும் புகையானது பனி மூட்டம் காரணமாக நகர் முழுக்க சூழ்ந்தது.

மாசுத் தரக்குறியீட்டு எண் 100க்கு மேல் போனால், அது அபாயகரமானது என்று பொருள். ஆனால் சென்னையில் இன்றூ பல இடங்களில் 300க்கும் மேல் போனது. ராமபுரத்தில் 1000 த்தை தாண்டியது.

தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்: ரத்தாகுமா?



தமிழ்நாட்டில் இயற்றப்பட்ட ‘லோக் ஆயுக்தா சட்டம் 2018’-ஐ ரத்து செய்யக்கோரி கரூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

லோக் ஆயுக்தா சட்டம் இயற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளனவா என்பது தொடர்பாகவும், மனுதாரர் மற்றும் தமிழ்நாடு அரசை விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

News Of The Day: இனிமேல் சமையல் குறிப்பு புத்தகங்களுக்கு கூட தடை வந்திடும் போல- சு.வெங்கடேசன் காட்டம்!



அரசாங்கத்திற்கும் எதிரான சர்ச்சைக்குரிய புத்தகங்களை வைத்திருப்பது விதிமீறல் என்று பபாசி கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அப்படி பார்த்தால் மகாத்மா காந்தி, அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, பெரியாரின் எந்த புத்தகத்தையும் இந்த புத்தகக் கண்காட்சியில் வைக்கக் கூடாது.

. ஏன் சமையல் கலை புத்தகத்தை கூட வைக்கக் கூடாது. ஏனெனில் அதில் வெங்காயத்தை பற்றி குறிப்பிருக்கும். அது மத்திய அரசுக்கு எதிரானது. உப்பு போட்டு சாப்பிடுவதை பற்றி சமையல் கலை புத்தகத்தில் இருக்கும். அது மாநில அரசுக்கு எதிரானது என்று ஒருவர் சொல்லலாம்.” என்று மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது?- வெளியான முக்கிய தகவல்!



நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தல் எப்போது என்று எதிர்பார்ப்பு எழத் தொடங்கியது. வரும் 27ஆம் தேதி அதற்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையொட்டி அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் வார்டுகள் பங்கீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு. சமயம் தமிழ் செய்திகள்

அடுத்த செய்தி