ஆப்நகரம்

தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை பயிற்சி

சென்னை: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று நடைபெறுகிறது.

Samayam Tamil 5 Sep 2018, 3:43 pm
சென்னை: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று நடைபெறுகிறது.
Samayam Tamil tsunamiothikai


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து, கிழக்கு கடற்கரை மாநிலங்களிலுள்ள கடலோர மாவட்டங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் அங்கமாக இன்று சுனாமி ஒத்திகை பயிற்சி நடத்தப்படுகிறது. காலை 8 மணி முதல் தொடங்கிய இந்தப் பயற்சி குறித்து பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி ஏற்படும் சூழலில் இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு சுனாமி எச்சரிக்கை முன்னறிவிப்புகளை வெளியிடும்.

அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் சுனாமி ஏற்பட்டால் மக்களை மீட்பதில் எப்படி செயல்படுகின்றனர் என்பதைக் கண்டறியும் நோக்கில் இந்த ஒத்திகைப் பயிற்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி