ஆப்நகரம்

சேகர் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

சேகர் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

TNN 30 Dec 2016, 5:38 pm
மணல் குவாரி தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Samayam Tamil sand mining baron shekhar reddys bail plea dismissed
சேகர் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி!


வருமானவரித்துறையினர் தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் நண்பர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் 127 கிலோ தங்கம் மற்றும் 170 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் ரெட்டி மற்றும் அவரது தொழில் நண்பர்கள் சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன், பிரேம் குமார் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கணக்கில் வராத கருப்புப்பணத்தை வங்ககளில் கொடுத்து புது ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு வங்கிகளை சேர்ந்த அதிகாரிகளும் உதவி செய்துள்ளனர்.

இவர்களின் மீது ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் மனத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவையும் நிதிபதி ஜி.விஜயலட்சுமி தள்ளுபடி செய்தார். கைது செய்யப்பட்டவர்கள் அரசுத்துறையை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் அவர்கள் மீது பதியப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும் ரெட்டி மற்றும் அவரது நண்பர்களின் நீதிமன்றக்காவல் ஜனவரி 3ம் தேதி முடிவடைகிறது.

அடுத்த செய்தி