ஆப்நகரம்

மணல் கொள்ளைக்கு முயன்றவர் மண்ணிலேயே புதைந்து பலி

வேலூர் மாவட்டத்தில் உள்ள அகவலம் ஏரியில் மணல் திருட முயன்ற இளைஞர்களில் ஒருவர் மண் சரிவில் புதையுண்டு உயிரிழந்தார்.

TNN 11 Aug 2017, 1:21 pm
வேலூர் மாவட்டத்தில் உள்ள அகவலம் ஏரியில் மணல் திருட முயன்ற இளைஞர்களில் ஒருவர் மண் சரிவில் புதையுண்டு உயிரிழந்தார்.
Samayam Tamil sand smuggler buried alive in tn
மணல் கொள்ளைக்கு முயன்றவர் மண்ணிலேயே புதைந்து பலி


வேலூர் மாவட்டம் அகவலமோட்டூரில் உள்ள அகவலம் ஏரியில் வாலாஜா பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் சேர்ந்து திருட்டுத்தனமாக மண் அள்ள முயன்றுள்ளனர். சுரங்கம் போல நிலத்தைத் தோண்டி மணல் அள்ள முயன்ற போது, மேற்பகுதியில் இருந்த கழிமண் சரிந்துவிழுந்திருக்கிறது. இதில், மண் அள்ள சுரங்கத்திற்குள் சென்ற இளைஞர் ஒருவர் மாட்டிக்கொண்டார்.

மண் சரிந்து விழுந்ததும் அவருடன் வந்த மூன்று நபர்களும் தப்பி ஓடி, போலீசாருக்கு போன் செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொக்ளேன் இயந்திரம் மூலம் மண்ணை அகற்றி இளைஞரை மீட்க முயன்றனர். ஆனால், ஏறத்தாழ மூன்று அடி ஆழத்தில் சிக்கியதால் அவர் சடலமாகவே மீட்கப்பட்டார்.

இறந்தவரின் இளைஞரின் பெயர் வேல் முருகன் என்று போலீசாரின் விசாரணையில் தெரிந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற மற்ற மூவருக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

அடுத்த செய்தி