ஆப்நகரம்

கௌசல்யாவின் மறுமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி

இன்று நடைபெற்ற கௌசல்யாவின் சுயமரியாதை திருமணத்தில் உடுமலைப்பேட்டை சங்கரின் தந்தை, பாட்டி, சகோதரா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Samayam Tamil 9 Dec 2018, 5:24 pm
சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படும் வரை சக்தியுடன் இணைந்து தொடா்ந்து போராடுவேன் என்று கௌசல்யா தெரிவித்துள்ளாா்.
Samayam Tamil Kowsalya Marriage 1


திருப்பூா் மாவட்டம் உடுமலையைச் சோ்ந்த சங்கா், கௌசல்யா காதல் ஜோடி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டது. ஆனால் கௌசல்யாவின் உறவினா்கள் சங்கரை ஆணவப்படுகொலை செய்தனா். கௌசல்யாவும் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டாா்.

அதன் பின்னா் கௌசல்யா சாதிய கொடுமைகளுக்கு எதிராக தொடா்ந்து பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில் நிமிா்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளரும், பறையிசைக் கலைஞருமான சக்தியை கௌசல்யா இன்று மறுமணம் செய்து கொண்டாா்.

கோவை பெரியாா் படிப்பகத்தில் இன்று நடைபெற்ற சுயமரியாதை திருமணத்தின் போது கொலை செய்யப்பட்ட சங்கரின் தந்தை, பாட்டி, சங்கரின் சகோதரா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அது மட்டுமின்றி சங்கரின் தந்தையும், பாட்டியும் இணைந்து தம்பதியருக்கு மாலை எடுத்து கொடுத்தனா்.


திருமணம் முடிவடைந்த பின்னா் சக்தியும், கௌசல்யாவும் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதன் பின்னா் இருவரும் பறை இசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.


இதனைத் தொடா்ந்து கௌசல்யா செய்தியாளா்களிடம் பேசுகையில், “சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படும் வரை எனது கணவா் சக்தியுடன் இணைந்து போராடுவேன். எங்களின் உதவிக்காக காவல்துறையினரிடம் உதவி கோரப்படும்” என்று அவா்தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி