ஆப்நகரம்

முதல்வரின் சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா!

தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பாக, முதல்வரின் சிறப்பு அதிகாரி பதவியில் இருந்து சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா செய்துள்ளார்.

TNN 7 Feb 2017, 12:14 pm
தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பாக, முதல்வரின் சிறப்பு அதிகாரி பதவியில் இருந்து சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா செய்துள்ளார்.
Samayam Tamil santha sheela nair quits from the post officer on special duty for chief minister
முதல்வரின் சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா!


தமிழக திட்டக்குழு துணைத் தலைவராக திறம்பட பணிபுரிந்த இவர், அதன்பின்னர் ஐஏஎஸ் பதவியில் இருந்து ஓய்வுபெற்றார். எனினும், ஷீலா நாயரின் பணித்திறமையை கருத்தில்கொண்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவரை தனது அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமித்தார்.

இதன்பின்னர், 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக வெற்றி பெற்றது. மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, சாந்தா ஷீலா நாயரை, முதல்வரின் சிறப்பு அதிகாரியாக நியமித்தார்.

இதன்படி, கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக, அதிமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தும் பணிகளை சாந்தா ஷீலா நாயர் மேற்பார்வை செய்துவந்தார். தற்போது திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக, ஷீலா நாயர் கூறியுள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக, பதவி விலகுகிறேன் என, சாந்தா ஷீலா நாயர் தெரிவித்துள்ளார்.

Santha Sheela Nair quits from the post officer on special duty for chief minister

அடுத்த செய்தி