ஆப்நகரம்

ஐஏஎஸ் அதிகாரியை பொதுச் செயலாளாராக்கிய கமல்

விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளதோடு அவர் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 1 Dec 2020, 12:13 pm
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு பெற்று கட்சிகளில் இணைவதை அதிகமாக பார்க்க முடிகிறது.
Samayam Tamil kamal haasan  santhosh babu


ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை பாஜகவில் இணைந்து தமிழக பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய சசிகாந்த் செந்தில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளதோடு அவர் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் அவர் இணைந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பிலும் இருவரும் இணைந்து கலந்துகொண்டனர்.

‘ஒரு நாளைக்கு 17 மாத்திரை போடுறேன்...2017இல் எமோஷன்ல பேசிட்டேன்’: மனம் திறந்த ரஜினி!

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் பல்வேறு உயர் பதவிகளை ஏற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி திரு சந்தோஷ் பாபு தன்னுடைய அபாரமான நேர்மை, அர்ப்பணிப்பு, செயல்திறன் மற்றும் சமூக அக்கறைக்காக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டவர். இன்னும் எட்டு ஆண்டுகள் அரசு பணி இருந்த போதும் மக்கள் சேவை செய்ய வேண்டும் எனும் உயரிய நோக்கில் தான் வகித்த உயர் பதவியை உதறி விருப்ப ஓய்வு பெற்றார்.

வாழ்நாள் முழுக்க சமரசமற்ற நேர்மையோடும், துணிச்சலோடும் ஊழலுக்கு எதிராக போராடி வந்த திரு சந்தோஷ் பாபு அவர்கள் தமிழகத்தை சீரமைக்கும் பணியில் நம்மோடு இணைந்திக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களுக்கு அறிவிக்கிறேன். மிகச் சரியான முடிவினை எடுத்து சந்தோஷ் பாபுவை மனதாரப் பாராட்டுகிறேன். இவரைப் போன்ற நேர்மையாளரின் வருகை நமது கட்சிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. அவரை ‘பொதுச் செயலாளர் - தலைமைக்கழகம்’ நியமித்துள்ளோம். என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனவரியில் தமிழக பள்ளிகளைத் திறக்க திட்டம்? அரசுக்கு அழுத்தம்!

அனைத்திலும் முத்திரைப் பதித்தவர் இதிலும் தடம் பதிப்பார் என்பதில் ஐயமில்லை எப்போதும் போல அனைத்து உறுப்பினர்களும் நமது புதிய பொதுச் செயலாளர் தலைமை அலுவலகம் அவர்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அளித்திட வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு தமது கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி