ஆப்நகரம்

மக்களை அவமானப்படுத்த வேண்டாம் தமிழசை அக்கா: சரஸ்வதி கிண்டல்!!

ஆர். கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பணம் கொடுத்ததாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதை அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சஸ்வதி விமர்சித்துள்ளார்.

TNN & Agencies 25 Dec 2017, 3:51 pm
ஆர். கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பணம் கொடுத்ததாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதை அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சஸ்வதி விமர்சித்துள்ளார்.
Samayam Tamil saraswathi attacks tamilisai for her opinion about ttv dinakaran victory
மக்களை அவமானப்படுத்த வேண்டாம் தமிழசை அக்கா: சரஸ்வதி கிண்டல்!!


ஆர். கே.நகர் இடைத் தேர்தலில் வரலாறு காணத வெற்றியை தினகரன் பெற்றார். இதனால் அதிமுக தோல்வியடைந்துள்ளது. இந்த வெற்றியை தினகரன் பணம் கொடுத்து வாங்கியதாதவும், மக்களிடம் இருந்து சுருட்டிய பணத்தை மக்களுக்கு கொடுத்ததாகவும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் ஆதரவாளர் மற்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில், ''நோட்டாவைவிட பாஜக குறைந்த வாக்குகள்தான் பெற்றது. அதனால் டிடிவி அவர்கள் நோட்டாவுக்கு பணம் கொடுத்துள்ளார் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? . நாங்கள் பணம் கொடுக்க தேவை இல்லை . அதற்கான அவசியமும் இல்லை . டிடிவி தினகரன் வரவேண்டும் என்று மக்கள் நினைத்ததால் அவர் வெற்றியடைந்துள்ளார்'' என்றார்.

அடுத்த செய்தி