ஆப்நகரம்

ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார், ராதிகா திடீர் சந்திப்பு!!

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜனை நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தனது மனைவியும் நடிகையுமான ராதிகாவுடன் சென்று சந்தித்துள்ளார்.

Samayam Tamil 19 Sep 2019, 5:26 pm
தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றபோது சிறப்பு விருந்தினராக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். அதன் பின்னர் மீண்டும் நேற்று அவரை சந்தித்துப் பேசியுள்ளார். அவருடன் அவரது மனைவியும், நடிகையுமான ராதிகாவும் சென்று இருந்தார்.
Samayam Tamil sarath R


தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 8ஆம் தேதி தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் தமிழகத்தில் இருந்து துணை முதல்வர் பன்னீர் செல்வம், பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் சமத்துவக் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அவரை மரியாதை நிமித்தமாக பலரும் சந்தித்து வருகின்றனர்.

6 ஏக்கர் அரசு நிலம் தனியாருக்குப் பட்டா.! வட்டாட்சியருக்கு செக் வைத்த கரூர் கலெக்டர்..

இந்த நிலையில் தமிழத்தில் இருந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார் இருவரும் புதன் கிழமை தெலுங்கானா ராஜ்பவனில் ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாக ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொற்குவை திட்டத்தில் குவிந்த 30,000 தமிழ் சொற்கள்!!

சர்ச்சை தமிழிசை:
இதற்கு முன்னதாக தமிழிசையும் சர்ச்சைக்குரிய ஆளுநர் என்பதை நிரூபித்துள்ளார். ஆளுநராக பதவியேற்ற பின்னர் மக்களை நேரடியாக சந்தித்து குறைகள் கேட்பேன் என்று கூறி இருந்தார். இதற்கு அந்த மாநிலத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி போன்று இவரும் மக்களை நேரடியாக சந்திப்பேன் என்று கூறி இருப்பது, ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தை மீறிய செயல் என்று டிவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி