ஆப்நகரம்

அண்ணாச்சியின் கடைசி ஆசையை வேதனையுடன் நிறைவேற்றிய சரவணபவன் ஊழியர்கள்..!

சென்னையில் சிகிச்சை பலனின்றி காலமான சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் கடைசி ஆசையை மிகவும் வேதனையுடன் நிறைவேற்றி வைத்துள்ளனர் உணவகத்தின் ஊழியர்கள்.

Samayam Tamil 19 Jul 2019, 10:38 am
கடந்த 9ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவில், பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே உடல்நலக் கோளாறால் அவதிப்பட்ட வந்த ராஜகோபால் சரணடைய வரும்போதே ஆம்புலன்சில் தான் வந்தார்.
Samayam Tamil சரவணபவன் அண்ணாச்சியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஊழியர்கள்
சரவணபவன் அண்ணாச்சியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஊழியர்கள்


பிறகு நீதிமன்ற வளாகத்திலேயே அவருக்கு உடம்பு முடியாமல் போனது. இதனால் சிறைக்கு அவரை அனுப்பாமல் , ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிட சிரமமாக இருந்தால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு அங்கு சிகிச்சை தரப்பட்டு வந்தது.

Also Read: சரவணபவன் ராஜகோபாலின் உயிரைப் பறித்த கொலை வழக்கு

மேலும் அவருடைய உடல்நிலை மோசமாகி வந்ததால், ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அவருடைய மகன் சரவணன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்தது.

சரவணபவன் அண்ணாச்சியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஊழியர்கள்


அதை தொடர்ந்து வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் ராஜகோபாலன் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவருடைய உயர் பிரிந்தது. ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட உடலுக்கு மாஜிஸ்திரேட் முன்னிலையில் நாளை உடற்கூறு ஆய்வு நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், மறைந்த ராஜகோபால் குடும்பத்தாரிடம் கூறியதன்படி, அவர் இறந்துவிட்டாலும் அதே தினத்தில் சரவணபவன் ஹோட்டல் வாடிக்கையாளர்களுக்காக திறந்தே இருக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்துள்ளது. இதனால் இன்று சரவணபவனின் அனைத்து கிளைகளும் திறந்தே இருந்தது.

உரிமையாளர் மறைந்துவிட்ட துக்கத்திலும் அந்த உணவக ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான சேவையை வழங்கினர். எனினும், இன்று இரவு 8 மணிக்கு பின்னர் சரவணபவனின் அனைத்து கிளைகளும் மூடப்பட்டுவிட்டன. அனைத்து ஊழியர்களும், தங்களுடைய உரிமையாளர்களுக்கு இறுதி மரியாதை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி