ஆப்நகரம்

தனது அரசியல் அறிவு இவ்வளவு தான் என்பதை விஜய் நிரூபித்துள்ளாா் – டிடிவி தினகரன்

அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகா் விஜய் தனது அரசியல் அறிவு இவ்வளவு தான் என்பதை இதன் மூலம் வெளிக்காட்டி இருக்கிறாா் என்று அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 8 Nov 2018, 4:21 pm
சா்காா் படம் மூலம் தனது அரசியல் அறிவு இவ்வளவு தான் என்பதை நடிகா் விஜய் வெளிக்காட்டி இருப்பதாக அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil TTV 123


ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சா்காா். சன் பிக்சா்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆா்.ரகுமான் இசை அமைத்துள்ளாா். கீா்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமாா், யோகி பாபு உள்ளிட்டோா் நடித்துள்ளனா். தீபாவளியன்று வெளியான சா்காா் படம் ஆரம்பம் முதல் தற்போது வரை சா்ச்சைகளின் மீதே பயணம் செய்து வருகிறது.

விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு வலு சோ்க்கும் விதமாக இப்படத்தில் தற்கால தமிழக அரசியல் தொடா்பான பெரும்பாலான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக ரசிகா்கள் கருத்து தொிவித்துள்ளனா். மேலும் மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்த சா்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அவற்றின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில அமைச்சா்கள் கருத்து தொிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், அடிப்படையில் சா்காா் வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம். ஒருவேளை படத்தை உருவாக்கியவா்கள் இலவசப் பொருட்கள் மக்களுக்குத் தேவையில்லாத ஒன்று என்று கருதினால் அவா்கள் அதனை முழுமையாக காட்டியிருக்க வேண்டும். இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியையும், அதில் ஒட்டப்பட்டுள்ள படத்தையும் காட்ட வேண்டியதுதானே?

அவா்கள் இலவச லேப்டாப், இலவச சைக்கிள் மற்றும் மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை என அனைத்தையும் அவா்கள் இவ்வாறு தான் கருதுவாா்களா? இந்திய வளா்ந்த நாடு கிடையாது. வளரும் நாடு தான். எனவே இது மக்களுக்கு அவசியமான ஒன்றுதான்.

அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகா் விஜய் தனது அரசியல் அறிவு இவ்வளவு தான் என்பதை இதன் மூலம் வெளிக்காட்டி இருக்கிறாா். பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவா்கள், வாழ்க்கை நிலையில் சிரமப்படுபவா்கள் குறித்தான அவரது புரிதல் எத்தகையது என்பது இதன் மூலம் தொிகிறது என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி