ஆப்நகரம்

திரைத்துறையினருக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை!!

''திரைத்துறையினர் இனி எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். அம்மா வழங்கிய இலவசப் பொருட்கள் விஜய் ரசிகர்களின் வீட்டிலும் உள்ளது'' என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

Samayam Tamil 9 Nov 2018, 12:00 pm

''விஜய், அஜித் ரசிகர்களின் வீட்டிலும் ஜெயலலிதா அளித்த இலவசப் பொருட்கள் உள்ளன'' என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
Samayam Tamil அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்


சர்கார் திரைப்படம் தற்போது பலத்த சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சர்கார் படத்தின் வில்லிக்கு வைக்கப்பட்டு இருப்பதாகவும், ஜெயலலிதா ஆட்சியில் அவர் கொண்டு வந்த இலவச திட்டங்கள் மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சர்கார் படத்தில் இடம் பெற்று இருக்கும் அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். காட்சிகள் நீக்கப்படும் என்று தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
AR Murugadoss: ’சர்கார்’ நள்ளிரவு பரபரப்பு; ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!
இதையடுத்து, இன்று மதுரையில் பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ''சர்கார் திரைப்படத்தில் வைக்கப்பட்டதைப் போல் இனி அனைவரும் காட்சிகளை வைப்பார்கள் என்பதால் எதிர்க்கிறோம். இனியாவது திரைத்துறையினர் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

மறைந்த தலைவரை வம்புக்கு இழுத்து பேசக்கூடாது. அவரது திட்டங்களால் பலரும் பயன் அடைந்துள்ளனர். ஏன் விஜய், அஜித் ரசிகர்களின் வீட்டிலும் அவர் அளித்த இலவசப் பொருட்கள் உள்ளன. மாணவிகளுக்கான இலவச சைக்கிள், மடிக்கணினி உட்பட பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா செய்துள்ளார். ஜாதி, மத பாகுபாடின்றி ஜெயலலிதா எல்லோருக்குமான திட்டங்களை செயல்படுத்தியவர். அவரை கொச்சைபடுத்த வேண்டாம்.

தற்போது சில காட்சிகளை படத்தில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளனர். இதற்காக படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

அடுத்த செய்தி