ஆப்நகரம்

காரை மாற்றிய சசிகலா.. கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்.. மூடப்பட்ட அதிமுக அலுவலகம்!

தமிழக எல்லையில் காரை மாற்றி அதிமுக கொடியுடன் புதிய காரில் வரும் சசிகலா. அவருக்கு வெகுவான வரவேற்பளித்த ஆதரவாளர்கள். சென்னையில் மூடப்பட்ட அதிமுக அலுவலகம்.

Samayam Tamil 8 Feb 2021, 10:48 am
காவல்துறை விதித்த தடையை மீறி அதிமுக கொடி பொருந்திய காரில் சசிகலா பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு புறப்பட்டார். அவருக்கு மீண்டும் நோட்டீஸ் வழங்கப்போவதாக தெரிவித்த காவல்துறை, அதிமுக கொடியுடன் வந்தால் நடவடிக்கை உறுதி எனவும் எச்சரித்துள்ளது.
Samayam Tamil Sasikala


மறுபுறம், கட்சி கொடி விவகாரம் எல்லாம் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப்பட வேண்டுமே தவிர போலீஸை வைத்து கட்டுப்படுத்த முயற்சிக்கக்கூடாது என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Sasikala: அதிமுக கொடி விவகாரம்.. சசிகலா டீமின் மாஸ்டர் பிளான்!
இந்நிலையில், தற்போது தமிழக எல்லைக்குள் சசிகலா நுழைந்துள்ளார். அவருக்கு ஆரத்தி எடுத்து, மலர்தூவி, பால்குடம் எடுத்து அவரது ஆதரவாளர்கள் வெகுவான வரவேற்பளித்தனர். அவரது காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது.

தமிழக எல்லையான ஜூஜுவாடிக்கு வந்தபோது காரை மாற்றிவிட்டு வேறு காரில் சென்னைக்கு புறப்பட்டார் சசிகலா. மாற்றப்பட்ட புதிய காரிலும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது.

அதிமுக கொடியுடன் புறப்பட்ட சசிகலா.. போலீஸின் அடுத்த நடவடிக்கை இதுதான்!
ஓசூர் அத்திப்பளியில் சசிகலாவுக்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். ஏராளமான தொண்டர்கள் சசிகலாவுக்கு பூச்செண்டுகளை கொடுத்தும் வரவேற்றனர்.

மறுபுறம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டு காணப்படுகின்றன.

அடுத்த செய்தி