ஆப்நகரம்

பேஸ்புக்கில் அடித்துக் கொள்ளும் சசிகலா குடும்பத்தினர்

அதிமுகவில் ஏற்பட்டுவரும் அதிரடி மாற்றம் இடையே சசிகலாவின் குடும்பச் சந்தை தற்போது பேஸ்புக்கிலும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதிமுகவில் இருந்து தினகரனை விலக்கியது குறித்து திவாகரன் மகன் ஜெயானந்த் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 19 Apr 2017, 10:21 pm
அதிமுகவில் ஏற்பட்டுவரும் அதிரடி மாற்றம் இடையே சசிகலாவின் குடும்பச் சந்தை தற்போது பேஸ்புக்கிலும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதிமுகவில் இருந்து தினகரனை விலக்கியது குறித்து திவாகரன் மகன் ஜெயானந்த் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sasikala family fight in facebook
பேஸ்புக்கில் அடித்துக் கொள்ளும் சசிகலா குடும்பத்தினர்


ஜெயானந்த் பேஸ்புக் பதிவில், 'சசிகலாவைத் தவிர அந்தக் குடும்பத்தில் இருந்து இனி கட்சிக்கு யாரும் வரமாட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பே இதை தான் வலியுறுத்தினோம். ஆனால் யாடும் ஏற்கவில்லை. தாமதமான முடிவு என்றாலும் இந்த முடிவை வரவேற்கிறோம்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்த பதிவிற்கு இளவரசி மகன் விவேக் கமெண்டாக ஒரு கமெண்ட் போட்டிருக்கிறார் " நடப்பவை கழகத்துடைய நன்மைக்கானவை அல்ல, மாறாக, கழகம் சுக்குநூறாக ஆவதற்கான வாய்ப்பை இவை உருவாக்கும்" என கடுமையாக பதிவிட்டுள்ளார். இந்தநிலையில் சசிகலாவின் குடும்ப பிரச்சனை இந்த பேஸ்புக் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டதே என சசிகலா அனுதாபிகள் கவலை அடைந்துள்ளனர்.

sasikala family fight in facebook

அடுத்த செய்தி