ஆப்நகரம்

எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கல; புலம்பும் சசிகலா

தமிழகத்தின் அரசியல் சூழ்நிலைகளை உணர்ந்த சசிகலா யாரையும் பார்க்க விரும்பாமல் தனிமையில் கவலை கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

TNN 21 Sep 2017, 6:17 pm
தமிழகத்தின் அரசியல் சூழ்நிலைகளை உணர்ந்த சசிகலா யாரையும் பார்க்க விரும்பாமல் தனிமையில் கவலை கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
Samayam Tamil sasikala gets depression in jail
எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கல; புலம்பும் சசிகலா


சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக தமிழக அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சிறையில் சசிகலா எப்படி உள்ளார் என்பதை பற்றி செய்திகள் வந்துள்ளன. சிறையில் இருக்கும் போது கூட தமிழகத்தில் நிலவி வரும் அரசியலை கவனித்து வந்துள்ளார்.

தன்னால் நியமிக்கப்பட்ட பழனிசாமியே தனக்கு எதிராக திரும்பியதை கண்ட அவர் வேதனையின் உச்சத்திற்கு சென்றுள்ளார். பன்னீர்செல்வம் துரோகி என்பது தெரியும், ஆனால், பழனிசாமி இப்படி செய்வார் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று கண்ணீர் சிந்தியுள்ளார்.

பழனிசாமியை முதல்வராக்கும் போது பல அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல், பழனிசாமியை முதல்வராக்கினேன். கடைசியில் கழுத்தறுத்துவிட்டார் என்று புலம்பிய வண்ணம் உள்ளாராம்.

இதன் காரணமாக விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சசிகலா, தற்போது யாருடனும் பேசாமல் மவுனம் காத்து வருகிறார். தன்னுடைய கணவர் நடராஜன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அதை சிந்தனையில் ஏற்றுக்கொள்ளாமல் மவுனமாகவே இருந்துள்ளாராம்.எப்படியோ, படையப்பா நீலாம்பரிக்குப் பின் சசிகலா தான் அந்த இடத்தை நிரப்ப முடியும் என்று விமர்சர்கள் கூறி வருகின்றனர்.

அடுத்த செய்தி