ஆப்நகரம்

சசிகலாவுக்கு வக்கணையாக விருந்து வைக்கும் ஜெயலலிதாவின் சமையல்காரர்

பெங்களூர்: பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு ஜெயலலிதாவிடம் சமையல்காரராக இருந்த பெண் சிறையில் தனியாக சமைத்து பரிமாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 18 Jul 2017, 9:39 pm
பெங்களூர்: பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு ஜெயலலிதாவிடம் சமையல்காரராக இருந்த பெண் சிறையில் தனியாக சமைத்து பரிமாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sasikala gets good food prepared by jayalaithaas chef
சசிகலாவுக்கு வக்கணையாக விருந்து வைக்கும் ஜெயலலிதாவின் சமையல்காரர்


சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் கிடக்கும் சசிகலா, சிறையில் அனைவருக்கும் அளிக்கும் உணவை சாப்பிடுவதில்லை. தனக்குப் பிடித்த உணவை வக்கணையாக சமைத்துப் போடுவதற்கு ஜெயலலிதாவின் சமையல்காரராக இருந்த பெண் சிறையிலேயே தங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. சசிகலாவுக்காக தனி சமையல் செய்ய சமையலறையும் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

சமையல்காரர் சிறைக்குள் சென்றது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. அவருக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளதாம். சசிகலாவுக்கு மட்டுமின்றி இளவரசிக்கும் வடித்துக்கொட்டுகிறாராம் அந்த சமையல்காரர்.

சசிகலா சிறையில் ஜாலியாக நைட்டியுடன் உலவும் சிசிடிவி காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமையல்காரர்யின் சேவைகளை உறுதிப்படுத்தும் காட்சிகளும் விரைவில் அம்பலமாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்த செய்தி