ஆப்நகரம்

சசிகலா உடல்நிலை மேலும் முன்னேற்றம்.. லேட்டஸ்ட் அப்டேட்!

சசிகலாவின் உடல்நில்நியில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 23 Jan 2021, 9:53 pm
சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். தண்டனைக் காலம் இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ளது.
Samayam Tamil vk sasikala


ஜனவரி 27ஆம் தேதியன்று சசிகலா சிறையில் இருந்து வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறுகள் காரணமாக அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

சசிகலா உடல்நிலை சீரானதா? வெளியானது லேட்டஸ்ட் மருத்துவ அறிக்கை!
மேலும், சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதிசெய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சசிகலாவின் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை இன்று இரவு 8 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவரது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 77 (நார்மல்), ரத்த அழுத்தம் 149/64 (நார்மல்), சுவாச விகிதம் நிமிடத்துக்கு 22 (நார்மல்) ஆக இருப்பதாக தெரிவித்துள்ளது.


மேலும், உடலில் ஆக்சிஜன் அளவு 97% ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் இயல்பாக உணவு எடுத்துக்கொள்வதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சிகிச்சைக்கு சசிகலா ஒத்துழைப்பு தருவதாகவும், ஐசியூ வார்டில் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி